தெலங்காணா உயர் நீதிமன்றம்
தெலங்காணா உயர் நீதிமன்றம் என்பது இந்திய மாநிலமான தெலங்காணா மாநிலத்தின் உயர் நீதிமன்றம் ஆகும். இது 7வது ஐதராபாத் நிஜாம் மீர் ஒசுமான் அலி கானால் அன்றைய ஐதராபாத் இராச்சியத்தில் அமைக்கப்பட்டது. பின்னர் இது ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது நவம்பர் 5, 1956 முதல் மாநில மறுசீரமைப்புச் சட்டம், 1956 கீழ் தோற்றுவிக்கப்பட்டது. ஆந்திரப் பிரதேச மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் ஐதராபாத்தில் உள்ள நீதித்துறை உயர் நீதிமன்றம் என மறுபெயரிடப்பட்டது.
Read article



